Posts

மக்களை சீரழிக்கும் மருத்துவமனைகள்

Image
கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெருக ஆரம்பித்தவுடன் ‘குடும்ப டாக்டர்’ என்ற சொற்றொடரே அழிந்து விட்டது. மருத்துவ உலகின் அட்டூழியங்களில் பாதிக்கப்படுவது நோயாளிகள் மட்டுமல்ல, திறமையான மருத்துவர்களும் தான். பெரும் நிறுவனங்கள் கால் பதித்தால் பெட்டிக் கடைக்காரர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கொடி பிடித்த யாருமே கார்ப்பரேட் மருத்துவமனைகள் வர ஆரம்பித்தவுடன் சின்னச் சின்ன மருத்துவமனைகளோ, அல்லது தனி மருத்துவர்கள் க்ளீனிக்குகளோ பாதிக்கப்படுவது குறித்து கவலைப்படவே இல்லை. கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஒவ்வொரு மருத்துவருக்கும் டார்கெட் வைக்கின்றன. இந்த மாசம் இத்தனை எக்கோ, இத்தனை ஈசிஜி, இத்தனை லொட்டு டெஸ்ட், இத்தனை லொடக்கு டெஸ்ட் என்றெல்லாம் நிபந்தனைகள். இதனால் பாதிப்புக்குள்ளாவது நோயாளிகள் மட்டுமல்ல.. மருத்துவர்களும் தான். திட்டு, சாபம் எல்லாம் பெரும்பாலும் மருத்துவர்களுக்குத் தான் போய்ச் சேருகிறது. கார்ப்பரேட் ஓனர்கள் தப்பித்து விடுகிறார்கள். முன்பெல்லாம் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தரும் 40 இன்ச் டிவி, பட்டாயா ட்ரிப் ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு அவர்களின் மருந்துகளை மருத்துவர்கள் எழுதித் தருவார்கள...

இறைவன் உண்பது எப்படி?

Image
‘’நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை எப்படி  அறிவது ? சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? குருவுடம் சிஷ்யன் ., கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான். குரு எதுவும் சொல்லாமல், அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார். பாடம் ஆரம்பித்த குரு, அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு. அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான். சிஷ்யன் ., “எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார். “முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”....

கொடிய விஷம் சீமான்

சீமான் கொடிய விஷம், கருணாநிதியின் நகல். முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஒரு தலைமுறையை அழித்துவிடும். கள நிலவரம் என்ன, நடைமுறை சாத்தியம் என்ன என எதையும் அறிந்திராத சுய சிந்தனை அற்ற முட்டாள்கள் வெறும் உணர்ச்சி போதையில் சிக்கி உள்ளனர். அனைவர் மனதிலும் தமிழர்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாக விஷமத்தை விதைக்கின்றனர். கிறிஸ்தவர்கள் மனிதர்கள் அனைவரும் பாவிகள் எனப் பிரச்சாரம் செய்து பாவமன்னிப்பு தருவதாக மதமாற்றம் செய்தனர். இவர்களும் அதே பாணியில் தமிழர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டு உள்ளதாகவும் இனவிடுதலை தனிநாடு பெற வேண்டும் என்றும் குழப்பம் செய்கின்றனர். தமிழ்நாடு மாநில மக்களின் நாடு இந்தியா. இந்தியர் அனைவரும் முழு சுதந்திரத்தோடு உள்ளனர். இவர்களால் இப்படி பேச முடிவதற்கே சுதந்திரம் தான் காரணம். மொழி அடிப்படையில் இனம் என்ற சொல்லாடலே தவறு. தாய்மொழி தமிழ் எனினும் இந்தியாவில் வாழ்பவர்கள் இந்தியர்கள்,  இலங்கையில் வாழ்பவர்கள் இலங்கை மக்கள், மலேசியா வில் வாழ்பவர்கள் மலேசிய மக்கள், சிங்கப்பூரில் வாழ்பவர்கள் சிங்கப்பூர் மக்களே. அனைவரும் அவரவர் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரிமைக...

கர்ணன் கவச ரகசியம்

Image
மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்! மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது. பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும். இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை யாரால் செய்து சாதிக்க முடியும்? எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர்...

தண்ணீரின் சக்தி

Image
டாக்டர் மசாரு இமோட்டோ (Dr.Masaru Emoto).ஜப்பானைச் சேர்ந்த மிகப் பெரிய ஆராய்ச்சியாளர்.தண்ணீர் பற்றிய இவரது ஆராய்ச்சிகள் உலகளவில் மிகவும் பிரசித்தம்.இவர் தண்ணீரைப் பல வகைகளில் ஆராய்ந்து தண்ணீருக்கு இருக்கும் அசாத்திய ஞாபகத்திறன் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை,புத்தகங்களை வெளியிட்டுள்ளார். தண்ணீர் தனக்கு தரப்படும்,தான் கடந்து செல்லும் பாதையில் தன் மேல் விழும் தகவல்களை அப்படியே தேக்கி தனக்குள் வைத்துக் கொள்ளும்.அதை வெளிப்படுத்தவும் செய்யும். ஒரு ஜாடி நிறைய தண்ணீரை நிரப்பி அதற்கு முன் அமர்ந்து கொண்டு தியானம் செய்கையில்,அந்த தியானத்தை தண்ணீர் அப்படியே தனக்குள் வாங்கிக் கொண்டது.அந்த தண்ணீரை எடுத்து அதனை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக ஆராய்ந்ததில் தண்ணீர் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிக அழகாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. அதே ஜாடி தண்ணீரை எடுத்து-எனக்கு நோய்கள் வர நீ தான் காரணம் என்று பழித்து,கோபத்தையும்,கொடூரத்தையும் வெளிப்படுத்திய போது,அதன் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிகப் பயங்கரமானதாக இருந்தது. இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் தண்ணீர் தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தியதை...

உத்தவ கீதை - சில கேள்விகளும் பதில்களும்

Image
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள்புரிந்தவர், உத்தவர்.  இவர் தனது   வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.    துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரே, இந்த அவதாரத்தில்பலர் என்னிடம் பல  வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே  கேட்டதில்லை. ஏதாவதுகேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்கநினைக்கிறேன் என்றார். இந்த உரையாடலில் உத்தவர் கேட்ட கேள்விகளும் அதற்கு யசோதை மைந்தனின் பதில்களும் உத்தவ கீதை எனப்படுகிறது. மகாபாரதத்தில் ஏற்படும் சில அடிப்படை சந்தேகங்களை இது தீர்த்து வைக்கிறது என்பது இதன் சிறப்பு. பெருமானே! நீ வாழச் சொன்ன வழிவேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்நிறைவேற்றுவாயா?...

பாலியல் பலாத்காரம் - எதிர்கொள்வது எப்படி?

Image
யாரென்றே தெரியாத ஒருவன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடும்போது பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். கத்துவது , உதைப்பது , கையில் கிடைப்பதை எடுத்து அடிப்பது இன்ன பிற ..... இதே  உறவுக்காரர் , ஆசிரியர் , நண்பர் , தெரிந்தவர் போன்றவர்கள் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுபோது , அவர்களின் மீதிருக்கும் பழைய மரியாதை காரணமாக எதிர்ப்பு தெரிவிக்க சற்று தாமதமாகி விடுகிறது . இவர்களா இப்படி ? என்ற அதிர்ச்சியும் குழப்பமும் கூட காரணமாக இருக்கலாம். பழைய மரியாதை , இப்போதைய கோபம் என கலந்து கட்டி , ஆக்ரோஷமான எதிர்ப்பை தெரிவிக்க இயலாமல் குழம்பி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த குழப்பத்தை சாதகமாக்கி வேலையை முடித்துக்கொள்கின்றனர் நன்கு "தெரிந்தவர்கள் " பாலியல் பலாத்காரம் என்று வரும்போது முன்பின் தெரியாதவனும் ஒன்றுதான் , கற்றுக்கொடுத்த ஆசிரியரும் ஒன்றுதான். பாசத்தை கொட்டிய சித்தப்பாவும் , மாமாவும் ஒன்றுதான் என்று சிறுமிகளுக்கு புரிய வைக்க வேண்டும். இந்த செயலில் ஈடுபடும்போதே பொறுக்கி ஆகி விடுகிறார்கள். அதனால் பொறுக்கிகளை எப்படி ஹேண்டில் செய்வோமோ அப்படியே இவர்களையும் ஹேண்டில் செய்ய வேண்...